பேரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து,
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
*
சென்னை, அண்ணா நகரில் அமைப்புசாரா வாரியம் மற்றும் தொழிலாளர் துறைக்கு தனி கட்டிடம் கட்டப்படும். இதற்கான செலவை தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நலவாரியம் ஏற்கும்.
* தொழிலாளர் துறையின் எல்லா செயல்பாடுகளையும் கணினி மயப்படுத்தி, மின் ஆளுகை திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த, தொழிலாளர் துறை நிர்வாகத்தில் மின் ஆளுகை திட்டம் 'லீட்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
* கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 60 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 3 ஆண்டு தொடர்ந்து உறுப்பினராகவும் இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும்.
* தொழிலாளர் நலவாரியம், பிற அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களின் திருமணம் அல்லது மகன், மகளுடைய திருமண உதவியாக ஆணுக்கு ரூ.3000ம், பெண்ணுக்கு ரூ.5,000 வழங்கப்படும்.
* கட்டுமான தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் தலைக்கவசம் வழங்கப்படும்.
* சலவை தொழிலாளர், முடித்திருத்துவோர், காலணி, தோல் பொருட்கள், பொற்கொல்லர் நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் செய்ய தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும்.
* 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் இந்த ஆண்டு புதுப்பித்துக் கொள்ள சலுகை அளிக்கப்படும். இதன்மூலம் ஒன்றரை லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
* தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
நன்றி:தினகரன்
2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் இந்த ஆண்டு புதுப்பித்துக் கொள்ள சலுகை மிகவும் வரவேற்கிற்றோம்
ReplyDeletespcial renewal concessions which date
ReplyDeletespcial renewal concessions date is not confirmed.the date announcement will be come to June or July 2010.see daily newspapers and employment websites
ReplyDelete